Pages

Sunday, July 3, 2011

புகார் கூறிய தோனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: அவுஸ்திரேலிய பத்திரிக்கைகள்

Best Blogger Tips
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் பயிற்சி போட்டியில் இந்திய வீரர்களுக்கு நடுவர் ஹார்பர் தவறான அவுட் கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
டோனி இதுகுறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து 3வது பயிற்சி போட்டியில் நடுவர் பொறுப்பில் இருந்து ஹார்பர் விலகினார்.
இந்த நிலையில் அவர் கூறியதாவது: எல்லா ஆட்டங்களிலும் எனது முழு அளவிலான நடுவர் தீர்ப்பையே அளித்திருக்கிறேன். 94 சதவீதம் நான் சரியாக தீர்ப்பளித்திருப்பதாக ஐ.சி.சி.யே கூறியுள்ளது.
முதல் பயிற்சி போட்டியில் ஹர்பஜன், தோனி ஆகியோருக்கு மட்டுமே நான் தவறான அவுட் கொடுத்திருக்கிறேன். ஆனால் இதை தேவையில்லாமல் இந்திய வீரர்கள் பிரச்னையாக்கி விட்டனர்.
மேலும் ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் நடந்து கொண்ட விதம் குறித்தும் விமர்சித்துள்ளார். இதற்கு இந்திய தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அவுஸ்திரேலிய பத்திரிகைகள் நடுவர் மீது புகார் கூறிய டோனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளன.
News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget