Pages

Tuesday, June 28, 2011

2015 ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கட் போட்டி: 14 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவிப்பு

Best Blogger Tips
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்தும் 2015 ம் ஆண்டு கிரிக்கட் உலகக் கோப்பை போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
முன்னதாக முதல் தர 10 அணிகள் மட்டுமே 2015 ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வீரர்கள் தரப்பிலிருந்தும் சிறிய அணிகளின் வாரியங்களிடமிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதனையடுத்து இந்த ஆண்டுக் கூட்டத்தில் அது முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஐ.சி.சி. தலைவர் ஷரத்பவார் 2015 உலகக் கோப்பை கிரிக்கட்டிற்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் பற்றி விவாதிக்கவேண்டும் என்று செயற்குழுவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

News:Lankasri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget