அர்ஜென்டினா அணிக்கு நீண்ட காலமாக கோபா கோப்பை கனவாகவே இருந்து வருகிறது. தனது நாட்டிற்கு கோப்பை வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்று மெஸ்சி கூறினார்.
1993 ம் ஆண்டிலிருந்து அர்ஜென்டினா அணிக்கு கோபா அமெரிக்க கோப்பை கனவாகவே உள்ளது. கோபா அமெரிக்க கோப்பை போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்தப் போட்டியில் தென் அமெரிக்காவை சேர்ந்த 10 அணிகள் பங்கேற்கின்றன.
கடந்த 1916 ம் ஆண்டு முதல் இந்த சர்வதேச போட்டி நடைபெறுகிறது. கோபா அமெரிக்காவில் அர்ஜென்டினா இறுதியாக 1993 ம் ஆண்டு தான் சாம்பியன் ஆகி இருந்தது. மெஸ்சி போன்ற உலகின் தலைச்சிறந்த வீரர்கள் இருந்த போதும், அர்ஜென்டினா அணி கோபா கோப்பையில் சமீப ஆண்டுகளாக வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
அர்ஜென்டினா மக்களும், பார்சிலோனா மக்களும் தன்னை பெரிதும் போற்றுகின்றனர். இருப்பினும் துரதஷ்டவசமாக கோபா அமெரிக்க கோப்பை பெற முடியாத நிலை உள்ளது. எனது கனவு உலகக் கோப்பையை வெல்வது அல்ல. கோபா அமெரிக்க கோப்பையை வெல்வது தான் எனது லட்சியக் கனவு என்றும் மெஸ்சி தெரிவித்தார்.
News:Lankasri



0 comments:
Post a Comment