உலகக் கோப்பைக்குப் பின் நியூசிலாந்து அணியின் கப்டன் பொறுப்பிலிருந்து டேனியல் வெட்டோரி விலகிவிட்டார். இதையடுத்து கப்டன் பதவிக்கு பிரென்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இவர்களில் யாரை கப்டனாக நியமிக்கலாம் என்று கருத்துக் கூறுமாறு 20 முன்னணி கிரிக்கட் வீரர்களிடம் அணி நிர்வாகத்தினர் கருத்து கேட்டுள்ளனர். பொதுவாக அணியின் வீரர்கள், கப்டன் ஆகியோரை நிர்வாகம் தான் தேர்ந்தெடுக்கும்.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கப்டனை நியமிப்பது குறித்து வீரர்களிடம் வெளிப்படையாகக் கருத்துக் கேட்டிருப்பது புதிய அணுகுமுறையாகக் கருதப்படுகிறது.
News:Lankasri



0 comments:
Post a Comment