இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் கங்குலி முதல் 3 ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியிலும் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடினார். சமீபத்தில் நடந்த 4ஆவது ஐ.பி.எல் போட்டியில் கங்குலியை கொல்கத்தா அணி உட்பட எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
போட்டி முடியும் தருவாயில் புனே வாரியர்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. ஒரு சில போட்டிகளில் அவர் ஆடினார். கங்குலியை கொல்கத்தா அணியில் சேர்க்காததால் அவரது ரசிகர்கள் ஷாருக்கான் மீது ஆத்திரமடைந்து அவருக்கெதிராக போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக ஷாருக்கானுடன் கங்குலி கருத்து வேறுபாடுடனிருந்து வந்ததாக கூறப்பட்டது. இதை கங்குலி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஷாருக்கானுடன் எனக்கு எந்தவித மோதலும் இல்லை. எங்களுக்குள் மோதல் இருப்பதாக தவறான தகவல்கள் எங்கிருந்து வருகிறது என்பது எனக்கு தெரியவில்லை .இது முற்றிலும் தவறானது, வதந்தியே ஷாருக்கான் எனது மூத்த சகோதரரை போன்றவர். அவருடனான எனது நட்பு தொடர்ந்துமிருந்து வருகிறதென்றார்.
News:Lankasri



0 comments:
Post a Comment