Pages

Saturday, October 29, 2011

9 விக்கெட்டுகளால் இலங்கையை வென்றது பாகிஸ்தான் அணி

Best Blogger Tips
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
துபாயில் நடைபெற்ற  இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 239 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 403 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

மணமகனாக ஜொலிக்கிறார், இந்திய கிரிக்கெட் அணி வீரர் கௌதம் கம்பீர்

Best Blogger Tips
இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் டெல்லியைச் சேர்ந்த நடாஷா ஜெயினை இன்று மணக்கிறார். அந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் டெல்லியைச் சேர்நதவர். அவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த நடாஷா ஜெயின் என்பவரை சந்தித்தார். 

அவர்கள் நட்பு, காதலாக மாறியது. அவர்கள் காதலுக்கு இரு வீ்ட்டாரும் பச்சைக் கொடி காட்டியதையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குர்கானில் உள்ள பண்ணை வீட்டில் கம்பீர், நடாஷா திருமணம் நடக்கிறது. இதில் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் பாதுஷா ஷாருக் கான் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. கௌதம் கம்பீர் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு மணமகளுக்கு மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷாந்தனு-நிகில் கம்பீர், நடாஷா உடைகளை வடிவமைத்துள்ளனர். நாளை கொல்கத்தாவில் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் டுவென்ட்டி 20 போட்டியில் கம்பீர் விளையாடமாட்டார். நாளை நடக்கும் போட்டிக்காக இந்திய அணியினர் பயிற்சி மேற்கொண்டுள்ளதால் அவர்கள் திருமணத்திற்கு வரமாட்டார்கள்

Sunday, October 23, 2011

சூதாட்ட தரகர் மசார் மஜீத் என்னை அணுகினார்: அப்ரிடி

Best Blogger Tips
பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் சல்மான்பட், முகமது ஆசிப், முகமது அமீர் ஆகியோர் கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் விளையாடிய போது “ஸ்பாட் பிக்சிங்” எனும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Friday, October 21, 2011

இந்தியாவில் கால்பந்து பயிற்சி முகாம்: பார்சிலோனா முடிவு

Best Blogger Tips
இந்தியாவில் கால்பந்து பயிற்சி முகாம் நடத்த பிரபல கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கால்பந்தை மேலும் பிரபலப்படுத்தும் வகையில் இந்த முயற்சி அந்த அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

Monday, October 17, 2011

தென் ஆப்ரிக்கா அணி திரில் வெற்றி

Best Blogger Tips

பரபரப்பான இரண்டாவது டுவென்டி-20 போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, அவுஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதன் மூலம் தொடரை 1-1 என சமன் செய்தது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி முதல் கட்டமாக இரண்டு போட்டிகள் கொண்ட டுவென்டி-20 தொடரில் பங்கேற்றது.

முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று ஜோகனஸ்பர்க்கில் நடந்தது. டொஸ் வென்ற அவுஸ்திரேலிய கப்டன் கேமரான் ஒயிட் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

அவுஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர்(0), மாத்யூ வேட்(10) ஏமாற்றம் அளித்தனர். ஷான் மார்ஷ்(26), டேவிட் ஹசி(12), கேமரான் ஒயிட்(39) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். கடைசி கட்டத்தில் மிட்சல் மார்ஷ் அதிரடியாக 36 ரன்கள் விளாச 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது.

சுலப இலக்கை விரட்டிய தென் ஆப்ரிக்க அணியின் டாப்-ஆர்டர் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றினர். கப்டன் ஹஷிம் ஆம்லா(4), ஸ்மித்(24), இங்கிராம்(5), டுமினி(0) விரைவில் வெளியேறினர். போத்தா 34 ரன்களுக்கு நடையை கட்டினார். ஒரு கட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 84 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

இந்த நேரத்தில் டெயிலெண்டர்களான வெய்ன் பார்னல், திரான் சேர்ந்து அணியை மீட்டனர். அதிரடியாக ஆடிய இவர்கள் 8வது விக்கெட்டுக்கு 27 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து அசத்தினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. டேவிட் ஹசி வீசிய முதல் பந்தையே சிக்சருக்கு விரட்டிய திரான் அணிக்கு திரில் வெற்றி தேடி தந்தார்.

தென் ஆப்ரிக்க அணி 19.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பார்னல்(29), திரான்(30) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை திரான் பெற்றார்.

News:LankaSri

இந்தியாவின் வெற்றி தொடருமா: இன்று இங்கிலாந்துடன் இரண்டாவது மோதல்

Best Blogger Tips

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. கடந்த போட்டியில் வென்ற இந்திய அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கிறது.

முதல் போட்டியில் சோபிக்கத்தவறிய பார்த்திவ் படேல், அஜின்கியா ரகானே ஜோடி இன்று சூப்பர் துவக்கம் அளிக்க வேண்டும். மூன்றாவது வீரராக களமிறங்கும் கவுதம் காம்பிர், சொந்த ஊரில் சாதித்துக் காட்டினால் நல்லது.

விராத் கோஹ்லி துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா நல்ல பார்மில் இருப்பது பலம்.

ஐதராபாத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த இவர்கள் இன்றும் கைகொடுக்கும் பட்சத்தில் மீண்டும் இமாலய இலக்கை பதிவு செய்யலாம். ரவிந்திர ஜடேஜா, ஆல்-ரவுண்டராக எழுச்சி கண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் இல்லாத நிலையில் அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளிட்ட இளம் வீரர்கள் முதலாவது போட்டியில் சாதித்து காட்டினர்.

இவர்களது சுழல் ஜாலம் இன்றும் தொடர வேண்டும். பிரவீண் குமார் வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளிப்பது பாராட்டுக்குரியது. வினய் குமார் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. உமேஷ் யாதவ் இன்றும் சாதிக்கலாம்.

இங்கிலாந்து அணி எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதல் போட்டியில் கப்டன் அலெஸ்டர் குக் மட்டும் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார். இவரது பொறுப்பான ஆட்டம் இன்றும் தொடர்ந்தால் நல்லது.

துவக்க வீரராக கீஸ்வெட்டர் எழுச்சி பெற வேண்டும். கெவின் பீட்டர்சன் துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் ரன் வேட்டை நடத்தலாம். மிடில்-ஆர்டரில் ஜோனாதன் டிராட், ரவி போபரா, பேர்ஸ்டோவ், சமித் படேல், டிம் பிரஸ்னன் உள்ளிட்டோர் அதிரடி காட்டும் பட்சத்தில் நல்ல ஸ்கோரை பெறலாம். முதல் போட்டியில் விளையாடாத இயான் பெல் இன்று களமிறங்கலாம்.

ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட திறமையான அனுபவ வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இங்கிலாந்து அணி திணறுகிறது.

டிம் பிரஸ்னன், ஸ்டீவன் பின், டெர்ன்பாக் உள்ளிட்ட வேகங்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி அளிக்கலாம். சுவான் தனது சுழல் ஜாலத்தை காட்டினால் நல்லது.

வெற்றி நடையை தக்கவைத்துக் கொள்ள இந்தியாவும், முதல் வெற்றியை பதிவு செய்ய இங்கிலாந்தும் காத்திருப்பதால் இன்று கடும் போட்டியை எதிர்பார்க்கலாம்.

News:LankaSri

மரதன் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

Best Blogger Tips

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆம்பெர் மில்லர் (27). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது சிகாகோவில் 26.2 மைல் தூரத்தை கடக்கும் மராத்தான் ஓட்டப் பந்தயம் நடந்தது. அதில் ஆம்பெர் மில்லர் கலந்து கொண்டு ஓடினார்.
நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்தாலும் மன தைரியத்துடன் ஓடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை சிகாகோவில் உள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜூன் என பெயரிடப்பட்டுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்த போதும் மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றது குறித்து ஆம் பெர் மில்லர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அதில், தனது கணவர் ஜோ மற்றும் டாக்டரின் அறிவுரைப்படி திட்டமிட்டு செயல்பட்டதாக கூறினார்.மேலும் 2 மைல் தூரம் ஓடியும், 2 மைல் தூரம் நடந்தும் பந்தய தூரத்தை கடந்ததாக தெரிவித்தார்.

News:LankaSri

இந்தியாவின் வெற்றி தொடரும் : கங்குலி நம்பிக்கை

Best Blogger Tips

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் வெற்றி தொடரும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஹைதராபாதில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை இந்தியா 126 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் டில்லியில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கங்குலி கூறியிருப்பது:

இந்திய அணி வலிமையானது. உலகின் எந்த அணியையும் வெல்லும் திறன் உள்ள வீரர்கள் நமது அணியில் உள்ளார்கள். அணியில் தொடர்ந்து இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். வீரர்கள் காயமடைந்ததுதான் முன்பு இங்கிலாந்துத் தொடரில் இந்தியா தோல்வியடைந்ததற்குக் முக்கியக் காரணம். முக்கியமாக ஜாகீர் கான் காயமடைந்தது, பந்து வீச்சை பலவீனமாக்கி விட்டது.

சுரேஷ் ரெய்னா சிறந்த வீரர். அவர் டெஸ்ட் போட்டிகளிலும் தனது திறமையை நிரூபிக்க வேண்டும். இப்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் வெற்றி தொடரும். ஆனால் அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா செல்கிறது. அங்கு நடைபெறும் போட்டிகள் நமது வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஐபிஎல், ரஞ்சி டிராபி போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளர் பணியையும் மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன் என்றார்.

தனியார் நிறுவன விளம்பர நிகழ்ச்சிகாக பிகார் தலைநகர் பாட்னாவுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று வந்த கங்குலி இவ்வாறு தெரிவித்தார்.

News:LankaSri

தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி

Best Blogger Tips

இரண்டாவது ஒருநாள் போட்டியில் சாமுவேல்சின் அதிரடி கைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்று தொடரை கைப்பற்றியது.
வங்கதேசம் சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி மிர்புரில் நடந்தது.

டொஸ் வென்ற வங்கதேச கப்டன் முஷ்பிகுர் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். துவக்க வீரர் தமிம் இக்பால்(1) ஏமாற்றினார். அனுபவ வீரர்கள் இம்ருல் கைய்ஸ், அஷ்ரபுல் டக் அவுட்டாகினர். நாசிர் ஹொசைன்(50), முஷ்பிகுர்(69) ஸ்கோரை உயர்த்தினர். வங்கதேச அணி 48.5 ஓவரில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

எளிய இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ்(80) சூப்பர் துவக்கம் தந்தார். டான்ஜா(39), சாமுவேல்சும்(88*) கைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 42.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

News:LankaSri

விரைவில் வெற்றி பாதைக்கு திரும்புவோம்: குக்

Best Blogger Tips

இனி வரும் போட்டிகளில் எழுச்சி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என இங்கிலாந்து அணி கப்டன் குக் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.

இதுகுறித்து கப்டன் குக் கூறியது: இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என மூன்றிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

வீரர்கள் வழக்கத்திற்கு மாறாக களத்தடுப்பில் சொதப்பியதால் இந்திய அணி 300 ரன்னை எடுத்தது. இது மீண்டும் தொடராது, விரைவில் எழுச்சி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும். இந்த ஒரு தோல்வியால் தன்னம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.

டொஸ் வெல்வது என்பது முக்கியமான ஒன்று. அதனை இழந்துவிட்டோம். முதல் போட்டியிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொண்டோம்.

சுழலுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியாமல் வீரர்கள் திணறினர். இதுவே தோல்விக்கு வழி வகுத்தது.

அடுத்த போட்டிக்காக கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். சுழலுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாதிப்போம்.

News:LankaSri

20 ஓவர் கிரிக்கட் போட்டி: 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

Best Blogger Tips

நியூசிலாந்து கிரிக்கட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர், 3 ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
நியூசிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கட் போட்டி ஹராரேயில் நேற்று நடந்தது.

டொஸ் வென்ற நியூசிலாந்து அணி கப்டன் பிரன்டன் மெக்கல்லம், ஜிம்பாப்வே அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கப்டன் டெய்லர் 46 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

நியூசிலாந்து அணி தரப்பில் மில்ஸ், நாதன் மெக்கல்லம் தலா 2 விக்கெட்டும், பிரைஸ்வெல், ஓரம், உட்காக் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 124 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 13.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 127 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில் 36 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்னும், பிரன்டன் மெக்கல்லம் 46 பந்துகளில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 81 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

பிரன்டன் மெக்கல்லம் ஆட்டநாயகன் விருது பெற்றார். நியூசிலாந்து-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

News:Lanka Sri

காம்பீர் தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும்: வாசிம் அக்ரம்

Best Blogger Tips

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காம்பீர் மூன்றாவது வீரராக களம் இறங்கினார். தெண்டுல்கர், ஷேவாக் ஆடினால் மட்டுமே அவர் மூன்றாவது வீரராக விளையாடுவார்.
மற்ற நேரங்களில் தொடக்க வீரராக விளையாடுவார். தெண்டுல்கருடனோ அல்லது ஷேவாக்குடனோ இணைந்து தொடக்க வீரராக ஆடுவார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தெண்டுல்கர், ஷேவாக் இடம் பெறவில்லை. இதனால் காம்பீர் தொடக்க வீரராக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரகானேயும், பார்த்தீவ் பட்டேலும் தொடக்க வீரராக விளையாடினார்கள். காம்பீர் மூன்றாவது வீரராக ஆடினார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காம்பீர் காயம் காரணமாக விளையாடாததால் பார்த்தீவ் பட்டேலும், ரகானேயும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

அதே நிலையை அணி நிர்வாகம் தற்போது பின்பற்றி உள்ளது. இந்த நிலையில் காம்பீர் தொடக்க வீரராக ஆட வேண்டும், அதை தான் விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் கப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய அணி நிர்வாகம் காம்பீரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மூன்றாவது வீரராக களம் இறங்கியதாக நான் நினைக்கிறேன். ஆனால் அவர் தொடக்க வீரராக உறுதியாக விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன்.

அவர் தொடக்க வீரராக விளையாடுவதையே நான் விரும்புகிறேன். அவர் ஒரு திறமை வாய்ந்த துடுப்பாட்டக்காரர் ஆவார். 50 ஓவர் வரை நின்று ஆடக்கூடிய திறமை உள்ளது. உமேஷ் யாதவின் பந்துவீச்சு நன்றாக இருந்தது. அவர் அதிகமான யார்க்கர் போட்டார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

வருண் ஆரோனுக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு வாய்ப்பு கொடுக்க இதுவே நல்ல தருணம்.

ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைமர்ஸ் அணியின் கப்டனாக காம்பீர் உள்ளார். அதே அணியின் பந்துவீச்சு ஆலோசகராக வாசிம் அக்ரம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News:Lanka Sri

Sunday, October 16, 2011

மும்பை மைதானத்தில் பயிற்சியை துவக்கினார் சச்சின்

Best Blogger Tips

காயம் காரணமாக ஓய்வில் இருந்த சச்சின் நேற்று மும்பையில் துடுப்பாட்ட பயிற்சியை துவக்கினார்.
இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் மாஸ்டர் துடுப்பாட்ட வீரர் சச்சின். ஒரு நாள் தொடர் துவங்க இருந்த நேரத்தில் ஏற்கனவே ஆப்பரேஷன் செய்திருந்த இவரது கால் பெருவிரலில் லேசாக வீக்கம் ஏற்பட்டது.

தொடர்ந்து வீக்கமும், வலியும் அதிகரித்ததால் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்காமல் நாடு திரும்பினார். இதுகுறித்து லண்டனில் உள்ள ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஜேம்ஸ் கால்டரை சந்தித்தார். அவரது ஆலோசனையில் பேரில் சச்சினுக்கு என தனிப்பட்ட வகையில் வடிவமைக்கப்பட்ட ஷூ அணிந்து வந்தார்.

சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மும்பை அணிக்கு ஹர்பஜன் சிங் தலைமை ஏற்று கோப்பை வென்று தந்தார். போட்டிகளில் பங்கேற்கவில்லை என்ற போதிலும் சச்சின் தனது அணியினருடன் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடக்கும் ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளுக்கான அணியிலும் சச்சின் தேர்வு செய்யப்படவில்லை.

இதனிடையே நேற்று முன்தினம் மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் சச்சின் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து சச்சின் வரும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின் போது அணிக்கு திரும்பி விடுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே சேவாக்கும் வரவுள்ள நிலையில் சச்சினும் பயிற்சிக்கு திரும்பியது இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.

News: Lanka Sri

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி: இறுதிச்சுற்றுக்கு பெர்ரர் முன்னேற்றம்

Best Blogger Tips

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுக்கு விளையாட ஸ்பெயின் வீரர் டேவிட் பெர்ரர் தகுதி பெற்றார்.
இரட்டையர் பிரிவு அரை இறுதியில் மேக்ஸ் மிரினி(பெலாரஸ்), டேனியல் நெஸ்டர்(கனடா) ஜோடியுடன் நேற்று மோதிய பயஸ் ஜோடி 1-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்றது. இறுதிப் போட்டியில் மைக்கேல் லோத்ரா-நேனட் ஜிமான்ஜிக் ஜோடியுடன் மிர்னி-நெஸ்டர் ஜோடி மோதுகிறது.

ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் ஸ்பெயின் வீரர்கள் டேவிட் பெர்ரர்-பெலிசியானோ லோபஸ் மோதினர்.

கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் பெர்ரர் 6-7(5-7) என்ற கணக்கில் தோற்று பின்தங்கினார். எனினும் அடுத்த செட்டில் பதிலடி கொடுத்த அவர் 6-3 என்ற கணக்கில் வென்று 1-1 என சமநிலைப்படுத்தினார்.

இதையடுத்து கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. பெலிசியானோவின் சர்வீஸ்கள் முறியட்டித்து புள்ளிகளைக் குவித்த பெர்ரர் 6-7(5-7), 6-3, 6-3 என்ற கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

News:Lanka sri

2012 யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் ரூனே விளையாட தடை

Best Blogger Tips

2012ல் நடக்கவுள்ள யூரோ கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் இங்கிலாந்து அணி, மான்டினிகிரோ அணிக்கு எதிராக டிரா செய்தது.
இந்த போட்டியில் பவுல் செய்த இங்கிலாந்து நட்சத்திர வீரர் ரூனேவுக்கு ரெட் கார்டு காட்டப்பட்டது.

இதையடுத்து வரும் யூரோ கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்கும் மூன்று லீக் போட்டிகளிலும் ரூனே விளையாட தடை விதிக்கப்பட்டது.

இது இங்கிலாந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, October 15, 2011

125 நாட்களுக்கு பின் கிடைத்த வெற்றி: டோனி மகிழ்ச்சி

Best Blogger Tips

இந்தியா - இங்கிலாந்து அணிகள் நேற்று முதல் ஒன்டேயில் ஐதராபாத்தில் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்தது.
டோனி 87, ரெய்னா 61, கோக்லி 37, காம்பீர் 32, ஜடேஜா 27 ரன் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியை சுழற்பந்து வீச்சாளர்கள் திக்குமுக்காட செய்தனர்.

36.1 ஓவரில் இங்கிலாந்து 174 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 126 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குக் 60 எடுத்தனர்.

இங்கிலாந்து அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 63 ரன்களுக்கு சாய்ந்தது. இந்தியா தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3, உமேஷ்யாதவ் 2, பிரவீன்குமார் 1 விக்கெட் கைப்பற்றினர்.

இங்கிலாந்தில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இந்திய அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். கடைசியாக இந்திய அணி ஜூன் 11ந் திகதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது.

125 நாட்களுக்கு பின்னர் தற்போது 126 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது. வெற்றி குறித்து கப்டன் டோனி அளித்த பேட்டி: பழிவாங்கும் தொடர் என்று இதை கூற முடியாது. பழிவாங்கும் என்ற சொல் மிகவும் கடுமையானது. இங்கிலாந்தில் பிற்பாதியில் நாங்கள் சிறப்பாகதான் ஆடினோம். மழையால் தான் பிரச்னை ஏற்பட்டது.

தற்போது இந்த தொடர் இளம் வீரர்கள் தங்களை முன்னேற்றி கொள்ள உதவும். நீண்டநாட்களுக்கு பிறகு இப்போதுதான் வெற்றி பெற்றுள்ளோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆட்டமும் சிறப்பாக இருந்தது.

நான் ஆடிய ஆட்டங்களில் இது மதிப்புமிக்க ஒன்று. 6வது இடத்தில் களமிறங்குவதால் எனது துடுப்பாட்டத்தில் நிறைய மாற்றங்களை ஏற்கனவே செய்து விட்டேன். தற்போது ராக்கெட் ஷாட் அடிப்பதற்கு அதிகம் பயிற்சி எடுத்தேன்.

இந்த ஆட்டத்தில் அது ஓரளவுக்கு கைகொடுத்தது. பனிப்பொழிவு பிரச்னை இருக்கும் என்று நினைத்ததால் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினோம். ஆனால் அந்த பிரச்னை அவ்வளவாக இல்லை.

ஜடேஜா மிகச்சிறந்த வீரர். பந்துவீச்சுடன் துடுப்பாட்டத்திலும் அவர் அசத்தினார். உமேஷ்யாதவ் நன்கு வேகமாக செயல்பட்டார்.

ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறவில்லை: பிசிசிஐ [

Best Blogger Tips

ஐந்தாவது இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) கிரிக்கட் போட்டி 2012 ஏப்ரல் 4 முதல் மே 27 வரை நடைபெறவுள்ளது. 
தொடக்க விழா ஏப்ரல் 3ம் திகதியும், முதல் ஆட்டம் ஏப்ரல் 4ம் திகதியும் நடைபெறுகிறது. இவை இரண்டுமே சென்னையில் தான் நடைபெறுகிறது.

Thursday, October 6, 2011

கலக்கல் வெற்றி பெற்ற பெங்களூரு அணி: பரிதாபத்துடன் வெளியேறிய தெற்கு அவுஸ்திரேலியா

Best Blogger Tips
சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு பெங்களூரு அணி ஜோராக முன்னேறியது.
நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில் இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறச் செய்தார் அருண் கார்த்திக். தோல்வியடைந்த தெற்கு அவுஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது.
மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20 தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று பெங்களூருவில் நடந்தது. இதில் பெங்களூரு றொயல் சாலஞ்சர்ஸ், தெற்கு அவுஸ்திரேலிய அணிகள் மோதின. டொஸ் வென்ற கிளிங்கர் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

Tuesday, October 4, 2011

அரையிறுதிக்கு முன்னேறுமா சூப்பர் கிங்ஸ்? : இன்று பலப்பரீட்சை

Best Blogger Tips
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
எனினும் இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் போட்டியில் நியூ செளத் வேல்ஸ் அணியுடனான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும்.

Text Widget

Text Widget