Pages

Saturday, October 29, 2011

மணமகனாக ஜொலிக்கிறார், இந்திய கிரிக்கெட் அணி வீரர் கௌதம் கம்பீர்

Best Blogger Tips
இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் டெல்லியைச் சேர்ந்த நடாஷா ஜெயினை இன்று மணக்கிறார். அந்த நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர், ஷாருக்கான் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் துவக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் டெல்லியைச் சேர்நதவர். அவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு டெல்லியைச் சேர்ந்த நடாஷா ஜெயின் என்பவரை சந்தித்தார். 

அவர்கள் நட்பு, காதலாக மாறியது. அவர்கள் காதலுக்கு இரு வீ்ட்டாரும் பச்சைக் கொடி காட்டியதையடுத்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. குர்கானில் உள்ள பண்ணை வீட்டில் கம்பீர், நடாஷா திருமணம் நடக்கிறது. இதில் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் பாதுஷா ஷாருக் கான் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தவிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. கௌதம் கம்பீர் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு மணமகளுக்கு மெஹந்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷாந்தனு-நிகில் கம்பீர், நடாஷா உடைகளை வடிவமைத்துள்ளனர். நாளை கொல்கத்தாவில் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் டுவென்ட்டி 20 போட்டியில் கம்பீர் விளையாடமாட்டார். நாளை நடக்கும் போட்டிக்காக இந்திய அணியினர் பயிற்சி மேற்கொண்டுள்ளதால் அவர்கள் திருமணத்திற்கு வரமாட்டார்கள்

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget