Pages

Monday, October 17, 2011

தொடரை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள் அணி

Best Blogger Tips

இரண்டாவது ஒருநாள் போட்டியில் சாமுவேல்சின் அதிரடி கைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்று தொடரை கைப்பற்றியது.
வங்கதேசம் சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி மிர்புரில் நடந்தது.

டொஸ் வென்ற வங்கதேச கப்டன் முஷ்பிகுர் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். துவக்க வீரர் தமிம் இக்பால்(1) ஏமாற்றினார். அனுபவ வீரர்கள் இம்ருல் கைய்ஸ், அஷ்ரபுல் டக் அவுட்டாகினர். நாசிர் ஹொசைன்(50), முஷ்பிகுர்(69) ஸ்கோரை உயர்த்தினர். வங்கதேச அணி 48.5 ஓவரில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

எளிய இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ்(80) சூப்பர் துவக்கம் தந்தார். டான்ஜா(39), சாமுவேல்சும்(88*) கைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 42.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதையடுத்து ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

News:LankaSri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget