
இனி வரும் போட்டிகளில் எழுச்சி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்புவோம் என இங்கிலாந்து அணி கப்டன் குக் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.
இதுகுறித்து கப்டன் குக் கூறியது: இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என மூன்றிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை.
வீரர்கள் வழக்கத்திற்கு மாறாக களத்தடுப்பில் சொதப்பியதால் இந்திய அணி 300 ரன்னை எடுத்தது. இது மீண்டும் தொடராது, விரைவில் எழுச்சி பெற்று வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும். இந்த ஒரு தோல்வியால் தன்னம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.
டொஸ் வெல்வது என்பது முக்கியமான ஒன்று. அதனை இழந்துவிட்டோம். முதல் போட்டியிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொண்டோம்.
சுழலுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியாமல் வீரர்கள் திணறினர். இதுவே தோல்விக்கு வழி வகுத்தது.
அடுத்த போட்டிக்காக கடின பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். சுழலுக்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாதிப்போம்.
News:LankaSri


0 comments:
Post a Comment