Pages

Monday, October 17, 2011

மரதன் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

Best Blogger Tips

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ஆம்பெர் மில்லர் (27). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது சிகாகோவில் 26.2 மைல் தூரத்தை கடக்கும் மராத்தான் ஓட்டப் பந்தயம் நடந்தது. அதில் ஆம்பெர் மில்லர் கலந்து கொண்டு ஓடினார்.
நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்தாலும் மன தைரியத்துடன் ஓடி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பந்தய தூரத்தை கடந்து சாதனை படைத்தார். அதை தொடர்ந்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை சிகாகோவில் உள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜூன் என பெயரிடப்பட்டுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி ஆக இருந்த போதும் மராத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றது குறித்து ஆம் பெர் மில்லர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அதில், தனது கணவர் ஜோ மற்றும் டாக்டரின் அறிவுரைப்படி திட்டமிட்டு செயல்பட்டதாக கூறினார்.மேலும் 2 மைல் தூரம் ஓடியும், 2 மைல் தூரம் நடந்தும் பந்தய தூரத்தை கடந்ததாக தெரிவித்தார்.

News:LankaSri

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget