Pages

Tuesday, May 31, 2011

சர்வதேச கிரிக்கட் போட்டியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அப்ரிதி திடீர் அறிவிப்பு

Best Blogger Tips
உலகக்கோப்பை கிரிக்கட்டில் அரை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அப்ரிதி ஒருநாள் போட்டிக்கான கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் அவர் மீது இந்த நடவடிக்கை எடுத்தது. பாகிஸ்தானின் சிறந்த "ஆல்ரவுண்டர்" ஆட்டக்காரரான அப்ரிதி இதனால் அதிருப்தி அடைந்தார். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அப்ரிதி திடீரென அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, கிரிக்கட் ரசிகர்களும், பாகிஸ்தான் மக்களும் என் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளனர். அதை கெடுக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் நடந்து கொண்டுள்ளது. வீரர்களுக்கு எந்த வகையில் மரியாதை கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதன் மூலம் ரசிகர்களின் மரியாதையும், அன்பையும் கெடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. எனவே சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
பாகிஸ்தான் கிரிக்கட் வாரியத் தலைவராக இஜாஸ் பட் இருக்கும் வரை நான் எனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டேன். தற்போது இருக்கும் கிரிக்கட் வாரிய நிர்வாகம் மக்களின் விருப்பத்துக்கு மாறாக செயல்படுகிறது. நான் மீண்டும் சொல்கிறேன் தற்போதைய கிரிக்கட் வாரிய நிர்வாகம் நீடிக்கும் வரையில் சர்வதேச கிரிக்கட்டில் விளையாட மாட்டேன். இவர்கள் இல்லாதபட்சத்தில் மக்கள் நான் விளையாட வேண்டும் என்று விரும்பினால் எனது முடிவை மறுபரிசீலனை செய்து மீண்டும் விளையாட வருவேன்.
இதே சமயம் உள்நாட்டு போட்டி மற்றும் லீக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். சர்வதேச போட்டியில் மட்டும் ஆட மாட்டேன். என்னை ஏன் கப்டன் பதவியில் இருந்து நீக்கினார்கள் என்பது தெரியவில்லை. நான் அணிக்காக கடினமாக உழைத்தேன். சிதறிக்கிடந்த அணியை ஒன்று சேர்த்து பலமான அணியாக உருவாக்கினேன்.
உலகக்கோப்பை கிரிக்கட் அரை இறுதிப்போட்டி வரை சிறப்பாக விளையாடினேன். ஆனால் அரை இறுதியில் தோற்றதற்காக என்னிடம் விளக்கம் கேட்காமலேயே கப்டன் பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று அப்ரிதி தெரிவித்தார்.
News:Lankasri

இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி * சுருண்டது இலங்கை

Best Blogger Tips
கார்டிப்: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அசத்தல் பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கார்டிப் நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 400 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணிக்கு டிராட் (203), குக் (133) கைகொடுக்க, நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 491 ரன்கள் எடுத்திருந்தது. பெல் (98), மார்கன் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
பெல் சதம்:
நேற்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணியின் பெல் சதம் அடித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 496 ரன்கள் எடுத்து "டிக்ளேர்' செய்தது. பெல் (103), மார்கன் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
சுருண்டது இலங்கை:
பின் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சில் திணறியது. இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சில் 82 ரன்களுக்கு சுருண்டதன் மூலம், இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இலங்கை சார்பில் பெரேரா அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் சுவான், டிரம்லட் தலா 4, பிராட் 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதன்மூலம் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரட்டை சதம் கடந்த டிராட் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இரண்டாவது டெஸ்ட் அடுத்த மாதம் 3ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது.
News:Dinamalar

தோனியுடன் அசத்திய அசின்

Best Blogger Tips
இந்திய அணியின் வெற்றிக் கேப்டனாக வலம் வரும் தோனி, விளம்பர உலகின் விருப்ப நாயகனாகவும் திகழ்கிறார்.

சமீபத்தில் பாலிவுட் கவர்ச்சி நாயகி பிபாஷா பாசுவுடன் இணைந்து "ஷூ' விளம்பரத்தில் தோன்றி பரபரப்பு ஏற்படுத்தினார். தற்போது நடிகை அசினுடன் ஜோடி சேர்ந்து இன்னொரு விளம் பரத்தில் கலக்கியுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டவர் தோனி. "டுவென்டி-20' உலக கோப்பை வென்ற பின், இவரது புகழ் பன்மடங்கு உயர்ந்தது. விளம்பரநிறுவனங்கள் இவரை தேடி வந்தன. ஒரு நிறுவனத்துக்கு "மாடலாக' தோன்ற பல கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார்.

முதலில் சக கிரிக்கெட் வீரர்களுடன் விளம்பர படங்களில் தலை காட்டிய இவர், சமீப காலமாக பிரபல நடிகைகளுடன் இணைந்து அசத்துகிறார். பிபாஷா பாசுவுடன் நடித்த "ஷூ' விளம்பரம்"கிளிக்' ஆக, தற்போது அசினுடன் இணைந்து "பிக் பஜார்' நிறுவனத்துக்கு"மாடலாக' தோன்றியுள்ளார். தமிழில் இருந்து இந்தி உலகிற்கு தாவியுள்ளஅசினுக்கு இந்த விளம்பரம் இன்னொரு திருப்புமுனை ஏற்படுத்தலாம். இவ்விளம்பர படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில்கேப்டன் தோனியும், நடிகை அசினும் ஜாலியாக பழகியுள்ளனர். இருவரும் ஒருசில மணி நேரத்தில் விதவிதமான உடைகளில் தோன்றியுள்ளனர்.

அசின் குறித்து தோனி கூறுகையில்,""அவர் குழந்தை குணம் படைத்தவர். அனைவரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர்,'' என்றார்.தோனிக்கு நடிகைகளின் அன்புத் தொல்லை அதிகம். பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, பிபாஷா பாசு,பிரித்தி ஜிந்தா மற்றும் கோலிவுட்டில் லட்சுமி ராயுடன் இவருக்கு உள்ள தொடர்பு பற்றி நிறையகிசுகிசுக்கள் வெளியாயின. இவர்கள் வரிசையில் அசினும் சேருவாரா?
News:Dinamalar

Monday, May 30, 2011

ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் தரங்கா

Best Blogger Tips
உலகக் கோப்பை கிரிக்கட் போட்டியின் போது இலங்கை வீரர் உபுல் தரங்கா ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கட் கவுன்சில்(ஐ.சி.சி) விரைவில் விசாரணையைத் தொடங்கவுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பையில் இலங்கை அணியில் விளையாடிய உபுல் தரங்கா தடை செய்யப்பட்ட பிரெட்னிசோலான் என்ற மருந்தை உட்கொண்டது சோதனையில் தெரியவந்துள்ளது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் தரங்கா சதமடித்தது குறிப்பிடத்தக்கது. ஐ.சி.சி விசாரணையின் போது தரங்காவுக்கு உதவுவதற்காக வழக்கறிஞர்களும் தயாராக உள்ளனர்.
இதுகுறித்து தரங்கா கூறுகையில்,"எனக்கு இந்த மருந்தை பரிந்துரைத்தவர் மிகச்சிறந்த மருத்துவர். அவரிடம் தான் இந்தியாவின் சச்சின், கெளதம் கம்பீர், ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் சிகிச்சை பெறுகின்றனர். அவ்வாறு இருக்கையில் அவர் எனக்கு பரிந்துரைத்த மருந்தில் தடை செய்யப்பட்டது பொருள் இருப்பது நிச்சயம் அவருக்குத் தெரிந்திருக்கும்" என்றார்.
தரங்கா விவகாரம் தொடர்பாக இலங்கை கிரிக்கட் வாரியத்தின் செயலாளர் நிஷந்தா ரணதுங்காவிடம் கேட்ட போது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதிகாரப்பூர்வமாக தரங்காவின் விவகாரம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக எந்தவிதமான புகாரோ, அறிக்கையோ இலங்கை கிரிக்கட் வாரியத்துக்கு வரவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ.சி.சி செய்தித்தொடர்பாளர் ஜேம்ஸ் பிட்ஸ்ஜெரால்டும் பதிலளிக்க மறுத்துவிட்டார். பிரெட்னிசோலான் மருந்து ஒவ்வாமை சார்ந்த நோய்கள், எதிர்ப்பு சக்தி, ஆஸ்துமா நோய்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. தரங்கா ஆஸ்மாவால் பாதிக்கப்பட்டவர்.
மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கடந்த சில நாள்களாக பயிற்சியில் ஈடுபடவில்லை. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News:Lankasri

ஐ.பி.எல் தொடரிலேயே எனக்கு மரியாதை கிடைத்துள்ளது: கிறிஸ் கெயில்

Best Blogger Tips
ஐ.பி.எல் போட்டியில் கிடைத்த மரியாதையும், ரசிகர்களின் அன்பும் மேற்கிந்தியத் தீவுகளில் கிடைக்கவில்லை என பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பது: ஐ.பி.எல் போட்டியில் விளையாடிய போது உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ரசிகர்கள் என் மீது அன்பும், மரியாதையும் காட்டினர். ஆனால் இது ஒருபோதும் மேற்கிந்தியத் தீவுகளில் கிடைத்ததில்லை.
மேற்கிந்தியத் தீவுகளில் இருந்து மூன்று வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் டேரன் பிராவோ மட்டுமே சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியில் இடம்பிடித்திருந்தார். கோப்பையை வென்ற அணியில் பிராவோ இடம்பெற்றது மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார்.
முன்னதாக கடந்த ஜனவரியில் பெங்களூரில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் கெயில் விலை போகவில்லை. பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த அவுஸ்திரேலிய வீரர் திர்க் நேன்ஸ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து அவருக்குப் பதிலாக கெயில் சேர்க்கப்பட்டார்.
இதனிடையே மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கட் வாரியத்துக்கும் அவருக்கும் மோதல் ஏற்பட்டது. இருப்பினும் 12 ஆட்டங்களில் விளையாடிய அவர், 2 சதங்களுடன் 608 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
News:Lankasri

சாம்பியன் லீக் கால்பந்து: பார்சிலோனா சாம்பியன்

Best Blogger Tips
பார்சிலோனா கால்பந்து அணி வெம்ப்ளியில் நடந்த சாம்பியன் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
கடந்த 3 ஆண்டுகளில் 2 வது முறை பார்சிலோனா அணி சாம்பியன் லீக் பரிசுக்கோப்பையை கைப்பற்றி உள்ளது. 2009 ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த இறுதிப்போட்டியில் ஆடியதை விட மான்செஸ்டர் யுனைடெட் அணி சிறப்பாக இந்த ஆட்டத்தில் ஆடியது. இருப்பினும் சிறந்த அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்ற ஆறுதலுடன் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெளியேறியது.

Sunday, May 29, 2011

ஐ.பி.எல் கிரிக்கட்: சாம்பியன் பட்டத்தை வென்றது சென்னை அணி

Best Blogger Tips
ஐ.பி.எல் சீசன் 4ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூருவை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
ஐ.பி.எல் சீசன் 4ல் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டொஸ் வென்று துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதனையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய சென்னை அணியின் ஹசியும், முரளி விஜய்யும் அபார துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய ஹசி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து சையத் முகமது பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் விஜய்யுடன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறிது நேரத்தில் 188 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளி விஜய் 52 பந்துகளில் 95 ரன்களுக்கு அவுட்டாகி சதத்தை நழுவ விட்டார். அடுத்த பந்திலேயே கப்டன் தோனி 22 ரன்களுக்கு ஸ்ரீநாத் அரவிந்த பந்தில் அவுட்டானார்.
கடைசி ஓவரில் மோர்கல் 2 ரன்களுக்கும், ரெய்னா 8 ரன்களுக்கும் அவுட்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்தார். இறுதியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் கெயில் 2 விக்கெட்களும், ஸ்ரீநாத் அரவிந்த் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
இதன் பின்னர் 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரி‌ன் 4வது பந்தில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதன் பின்னர் அகர்லாவ்ல 10 ரன்களுக்கு அவுட்டானார்.
ஒரு முனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் விராத் கோக்லி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் கோக்லி 36 ரன்களுக்கும், ஏபி டி வில்லியர்ஸ் 18 ரன்னுக்கும் அவுட்டானார். லூக் போமர்ஸ்பாச் 2 ரன்னுக்கும், கேப்டன் வெட்டோரி ரன் ஏதுவும் எடுக்காமலும், அபிமன்யு மிதுன் 11 ரன்னுக்கும் அவுட்டாயினர்.
கடைசி கட்டத்தில் திவாரியும் ஜாகிர் கானும் இணைந்து கவுரவமான ரன்கள் எடுக்க போராடினர். ஜாகிர்கான் 21 ரன்களுக்கு அவுட்டானார்.
News:Lankasri

Saturday, May 28, 2011

இலங்கை அணியின் தலைவரின் கருத்துக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு

Best Blogger Tips
தான் மீண்டும் பாகிஸ்தானில் விளையாட விரும்பவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திலகரட்ன தில்ஷான் கூறியமைக்கு பாகிஸ்தானிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திலகரட்ன தில்ஷானின் கருத்துகளை சாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் லெப். ஜெனரல் தாகிர் ஸியா, அணித்தலைவர் என்ற வகையில் இவ்வகையான கருத்துக்களை வெளியிடுவதை தில்ஷான் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் துறைக்கு எப்போதும் பாகிஸ்தான் ஆதரவாக இருந்துவந்துள்ளது எனவும் தாகிர் ஸியா கூறினார்.
தாகிர் ஸியா 1999 முதல் 2004 ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாகிஸ்தானின் புகழ்பெற்ற முன்னாள் வீரரான அப்துல் காதிரும் தில்ஷானை விமர்சித்துள்ளார்.
தில்ஷானின் கருத்து பொறுப்பற்றதாகும் எனக்கூறிய அப்துல் காதிர், இது கிரிக்கெட் விளையாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் இலங்கை கிரிக்கெட் சபையும் ஐ.சி.சியும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார்.
News:Lankasri

Friday, May 27, 2011

ஊழல் பிரச்சினையில் தவிக்கும் சர்வதேச கால்பந்து அமைப்பு

Best Blogger Tips
ஊழல் விவகாரத்தில் சர்வதேச கால்பந்து அமைப்பு “பிபா” தவிக்கிறது.
இந்த அமைப்பின் தலைவர் வேட்பாளர் முகமது பின் ஹம்மம் மற்றும் துணைத்தலைவர் ஜாக் வார்னர் மீது 40 ஆயிரம் டொலர் லஞ்சக் குற்றச்சாட்டு உள்ளது. இந்த இரு தலைவர்களும் பிபா விசாரணைக் கமிட்டி முன்பாக ஞாயிற்றுக்கிழமை ஆஜராகிறார்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்டால், இவர்கள் நீண்ட காலம் கால்பந்து அமைப்பில் செயல்பட முடியாத தடை விதிக்கப்படும்.

Wednesday, May 25, 2011

மான்செஸ்டர் யுனைடெட் மரியாதைக்கு உரிய அணி: விடிக்

Best Blogger Tips
மான்செஸ்டர் யுனைடெட் அணி சக்தி வாய்ந்த, மரியாதைக்கு உரிய அணி என கிளப் கப்டன் நெமன்ஜா விடிக் தெரிவித்தார்.
வருகிற சனிக்கிழமை வெம்ப்ளியில் சாம்பியன் லீக் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் பார்சிலோனா அணியும் மான்செஸ்டர் யுனைடெட் அணியும் மோதுகின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரோம் நகரில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை பாரிசிலோனா அணி வீழ்த்தியது.
சாம்பியன் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் அணிக்கு என ஒரு தனி மரியாதை உள்ளது என அணி கப்டன் நெமன்ஜா விடிக் தெரிவித்தார். பார்சிலோனா அணி நல்ல அணி தான். சில நல்ல விளையாட்டுகளையும் மேற்கொள்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் எந்தப் போட்டியிலும் வெற்றி காணாத அணி அல்ல. நாங்கள் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
சாம்பியன் லீக் இறுதிப்போட்டிக்காக மான்செஸ்டர் யுனைடெட் அணியில் சில வீரர்களை மேலாளர் பெர்குசன் மாற்றம் செய்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் 4 சாம்பியன் பட்டம் வென்ற அணியாக மான்செஸ்டர் யுனைடெட் அணி உள்ளது. இந்த சாம்பியன் லீக் எங்களின் 3 வது இறுதிப்போட்டி. இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என யுனைடெட் அணியின் கப்டன் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில் பல பெரிய போட்டிகளை எதிர் கொண்டுள்ளோம். அந்த அனுபவத்தை பயன்படுத்தி சாம்பியன் லீக் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவோம் என்றும் விடிக் தெரிவித்தார்.


சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாட விருப்பம்: விராத் கோஹ்லி

Best Blogger Tips
இந்தியாவுக்காக நிறைய சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும் என இளம் வீரர் விராத் கோஹ்லி விருப்பம் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் சச்சின், டோனி, சேவாக், ஜாகிர் உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்களுடன் காம்பிர் தலைமையில் களமிறங்க உள்ள இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பலவீனம் தெரியும்: மெஸ்சி

Best Blogger Tips
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டி வருகிற சனிக்கிழமை வெம்ளியில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் பரிசுக்கோப்பையை வெல்ல பார்சிலோனா அணியும், மான்செஸ்டர் யுனைடெட் அணியும் களம் இறங்குகின்றன. சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சாம்பியன் ஆக மான்செஸ்டர் யுனைடெட் அணியின் பலவீனங்களை பயன்படுத்துவோம் என பார்சிலோனா அதிரடி வீரர் லியோனல் மெஸ்சி கூறினார்.

Tuesday, May 24, 2011

பிரதான செய்திகள் பிளே ஆப் சுற்று முதல் போட்டி: இன்று சென்னை - பெங்களூரு அணிகள் பலப்பரிட்சை

Best Blogger Tips
ஐ.பி.எல். "பிளே ஆப்" சுற்று முதல் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு றோயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மீண்டும் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லலாம் என்பதால், இரு அணிகளும் கடும் போராட்டத்தை வெளிப்படுத்த தயாராக உள்ளன. இந்தியாவில் நடக்கும் நான்காவது ஐ.பி.எல். "டுவென்டி 20" கிரிக்கட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் முடிந்து இன்று, "பிளே ஆப்" சுற்று போட்டிகள் துவங்குகின்றன. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு றோயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
லீக் சுற்று போட்டிகளில் 9 வெற்றிகள் பெற்ற சென்னை அணி, கடைசி போட்டியில் பெங்களூருவுடன் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. இதற்கு துடுப்பாட்டக்காரர்களின் பொறுப்பற்ற ஆட்டம் தான் முக்கிய காரணம். துவக்க வீரர்கள் மைக்கேல் ஹசி (429 ரன்கள்), முரளி விஜய் (334), ரெய்னா (357), பத்ரிநாத் (362) மற்றும் சகா ஆகியோர் கடந்த போட்டியைப் போல அல்லாமல் இன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
இக்கட்டான நேரங்களில் அணிக்கு கைகொடுக்கும் கப்டன் தோனி (341) மறுபடியும் ரன்குவிப்புக்கு உதவுவது நிர்வாகத்துக்கு ஆறுதல் தான். நேற்று முன்தினம் 40 பந்துகளில் 70 ரன்கள் எடுத்த இவர் இன்றும் அதை தொடர முயற்சிக்கலாம்.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சில், இதுவரை தலா 15 விக்கெட் வீழ்த்திய போலிஞ்சர், ஆல்பி மார்கல் இருவரும் மீண்டும் சரியான பாதைக்கு திரும்பினால் நல்லது. சுழற்பந்து வீச்சில் தமிழகத்தின் அஷ்வின் (16 விக்.) இன்றைய போட்டியில் மீண்டும் ஜொலித்தால் பெங்களூரு அணியின் ரன் குவிப்புக்கு அணையிடலாம்.
துவக்கத்தில் தோல்விகளால் துவண்டு கிடந்தது பெங்களூரு அணி. கிறிஸ் கெய்லின் வருகைக்குப் பின் திடீரென எழுச்சி கண்டது. முக்கியமாக 9 போட்டிகளில் மட்டும் பங்கேற்று 511 ரன்கள் குவித்துள்ள கெய்லின் துடுப்பாட்டம் தான் இதற்கு காரணம். சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய இவர், இன்றும் அதிரடியை தொடர காத்திருக்கிறார். இவருடன் விராத் கோஹ்லி (444), டிவிலியர்ஸ் (262) ஆகியோரும் சென்னை அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, May 23, 2011

உலகின் பெரிய கிளப் மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு வெற்றி: ரூனி நம்பிக்கை

Best Blogger Tips
உலகின் மிகப்பெரிய கால்பந்து கிளப்பாக உள்ள மான்செஸ்டர்ஸ் யுனைடெட் அணி தொடர்ந்து வெற்றி பெறும் என வெய்ன் ரூனி நம்பிக்கை தெரிவித்தார்.
பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் சாதனை படைத்த மான்செஸ்டர்ஸ் யுனைடெட் அணி, சாம்பியன் லீக் கால்பந்து போட்டியிலும் வெற்றி பெறும் என ரூனி தெரிவித்தார். பிரிமியர் லீக்கில் சவால் எழுப்பிய செலிசா அணி குறித்து ரூனி கூறுகையில், பிரிமியர் இறுதிப் போட்டியில் செலிசா அணி ஆட்டம் பிரம்மாண்டமாக இருந்தது. நாங்கள் அவர்களுடன் ஆடிய ஆட்டத்தை இழந்திருந்தால் செலிசா முன்னனி பெற்றிருக்கும் என்றார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணி 4-2 கோல் கணக்கில் பிரிமியர் லீக்கில் செலிசா அணியை தோற்கடித்தது. சனிக்கிழமை சாம்பியன் லீக் இறுதிப் போட்டி நடக்கிறது. வெம்ளி மைதானத்தில் பார்சிலோனா அணியை எதிர்த்து மான்செஸ்டர் அணி ஆடுகிறது.
பரிசுக்கோப்பைகளையும், பதக்கங்களையும் பெறவே ஆடுகிறோம். அணியின் மகத்தான வெற்றிக்கு கூட்டு முயற்சியே காரணம். இந்த சீசனில் முதல் பாதியில் நான் எதிர்பார்த்த அளவு ஆடவில்லை. பின் பகுதியில் அணிக்கு எனது பங்களிப்பை அளித்தேன் என ரூனி பெருமிதத்துடன் கூறினார்.
சனிக்கிழமை நடைபெறும் சாம்பியன் லீக் போட்டியில் பரிசை வெல்வது தான் எங்களது லட்சியம் என்றும் அவர் தெரிவித்தார்.
News:Lankasri

அப்ரிடியின் நீக்கம் வீரர்களின் ஒற்றுமையைக் குலைக்கும்

Best Blogger Tips
அணியின் தலைமைப் பதவியில் இருந்து அப்ரிடியை நீக்கியுள்ள கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட்டின் முடிவு வீரர்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கேப்டனை மாற்றியிருக்கும் இந்த முடிவால் வீரர்கள் தனித்தனி குழுக்களாக செயல்பட ஆரம்பித்துவிடுவார்கள். உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியை அரையிறுதி வரை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர் அப்ரிடி. அவரை நீக்கியிருப்பதால் எந்த பலனும் கிடைக்காது. பட் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி அப்ரிடியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இவ்வாறு அடிக்கடி கேப்டனை மாற்றுவது அணி வீரர்களுக்கு இடையே ஒற்றுமையின்மையையே ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் தாஹிர் ஜியா தெரிவித்தார்.
முன்னாள் தேர்வுக்குழு தலைவர் இக்பால் காஸிம் கூறுகையில், அடிக்கடி கேப்டனை மாற்றுவதால் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போகும். கடந்த 2008 அக்டோபர் முதல் இப்போது வரையிலான காலத்தில் 11 முறை கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் காதிர் கூறுகையில், ஊடகங்களிடம் பேசும்போது அப்ரிடி கவனமாக இருக்க வேண்டும். ஆனாலும் கேப்டன் பதவியை பறித்திருப்பது சரியான முடிவு அல்ல. மிஸ்பா தலைமையின் கீழ் அப்ரிடியை விளையாட வைத்திருப்பது மோசமான முடிவு என்றார்.
முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஜலாலுதீன் கூறுகையில், அப்ரிடி எந்த கிரிமினல் குற்றத்தையும் செய்துவிடவில்லை. ஒரு கேப்டனாக அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பற்றி பேசியதற்காக அவரை நீக்கியது நியாயமற்றது என்றார்.
வாசிம் அக்ரம்: பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியது: பயிற்சியாளர் வக்கார் யூனுஸீடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அப்ரிடி நீக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளருக்கும், கேப்டனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புதிதல்ல. உலகக் கோப்பைக்கு பிறகு பாகிஸ்தானின் கதாநாயகனாக அப்ரிடி உயர்ந்துள்ளார். இந்த நிலையில் அப்ரிடியை மாற்றியிருப்பது தவறான முடிவு என்று அவர் கூறியுள்ளார்.
News:Lankasri

Sunday, May 22, 2011

அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அணிகள்

Best Blogger Tips
நான்காவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றன.
ஏற்கனவே உள்ள 8 அணிகளோடு இந்த முறை புதிதாக புணே வாரியர்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா ஆகிய 2 அணிகள் பங்கேற்று விளையாடின.
"லீக்" முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இன்றுடன் லீக் ஆட்டம் முடிகிறது. ஆனால் நேற்றைய போட்டி முடிவிலேயே தெரிந்துவிட்டன.

கோல் அடிப்பதில் ரொனால்டோ புதிய சாதனை

Best Blogger Tips
ரியல் மாட்ரிட் அணியின் அதிரடி வீரர் ரொனால்டோ லீக் கால்பந்து போட்டியில் கோல் அடிப்பதில் புதிய சாதனை படைத்துள்ளார்.
அவர் சனிக்கிழமை அல்மேரியா அணியுடன் மோதிய ஆட்டத்தில் தமது அணி 8-1 கோல் கணக்கில் வெற்றி பெற உதவினார். இந்த ஆட்டத்தில் 26 வயது ரொனால்டோ 2 கோல்களை அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 40 லீக் கோல்களை அடித்த சாதனை வீரர் ஆனார்.
ஒரு சீசனில் அதிக கோல் அடித்த வீரர் லா லிகா சாதனையையும் முறியடித்தார். கடந்த 4 ஆட்டத்தில் ரொனால்டோ 11 கோல் அடித்தார். பிரிமியர் லீக் உள்ள அனைத்து போட்டிகளும் இந்த சீசனில் ரொனால்டோ 53 கோல் அடித்தார்.
தனது கோல் குவிப்பில் அவர் 7 ஹாட்ரிக் கோல் சாகனை படைத்துள்ளார். ஹாட்ரிக் என்பது ஒரு ஆட்டத்தில் தொடர்ந்து 3 கோல்களை போடும் அற்புத சாதனையாகும். தனது கோல் குவிப்பு சாதனை குறித்து ரொனால்டோ கூறுகையில், எனது மாட்ரிட் அணியினருக்கே கடமைப்பட்டு இருக்கிறேன். அவர்களது ஒத்துழைப்பால் தான் என்னால் இவ்வளவு கோல்களை குவிக்க முடிந்தது என தெரிவித்தார். அவர்கள் உதவி இல்லாமல் இந்த லீக் சீசனில் 40 கோல் அடித்திருக்க முடியாது என்றும் அவர் நெகிழ்வுடன் தெரிவித்தார்.

பிரதான செய்திகள் பஞ்சாப் அணி பரிதாப தோல்வி: அமித் மிஸ்ராவின் ஹாட்ரிக்கால் டெக்கன் அபார வெற்றி

Best Blogger Tips
அமித் மிஸ்ராவின் அசத்தலான "ஹாட்ரிக்" கைகொடுக்க பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கன் அணி அபார வெற்றி பெற்றது.
பந்துவீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம் என கிரிக்கட்டின் அனைத்து பிரிவிலும் சொதப்பிய பஞ்சாப் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. நான்காவது ஐ.பி.எல். தொடரின் முக்கிய லீக் போட்டியில் கில்கிறைஸ்ட்டின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், காமிரான் ஒயிட்டை கப்டனாக கொண்ட டெக்கன் சார்ஜர்ஸ் அணியை சந்தித்தது.

Saturday, May 21, 2011

விளம்பர உலகின் செல்வாக்குமிக்க நாயகனாக டோனி

Best Blogger Tips
விளம்பர உலகில் செல்வாக்கு மிக்க விளையாட்டு வீரர்கள் வரிசையில் இந்திய கப்டன் டோனி முன்னணியில் இருக்கிறார்.
இவர் நடால், கோப் பிரயண்ட் போன்ற சர்வதேச நட்சத்திரங்களை முந்தி 10 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கப்டன் தோனி 2007 இல் இவரது தலைமையிலான அணி " ருவென்ரி20' உலகக் கிண்ணத்தை வென்றது. சமீபத்தில் 50 ஓவர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றினார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் பெற்றுக் கொடுத்தார்.
இவர் தொட்ட தெல்லாம் பொன்னாக விளம்பர நிறுனவங்கள் மொய்க்கத் தொடங்கின. தங்களது பொருட்களுக்கு "மொடலாக' தோன்ற இவருக்கு கோடிகளை கொட்டிக் கொடுத்தன. லண்டனிலிருந்து வெளியாகும். "ஸ்போர்ட்ஸ் புரோ' என்ற பத்திரிகையின் சமீபத்திய கணிப்பின்படி தென்கிழக்கு ஆசியாவின் நம்பர்1 விளம்பர நட்சத்திரமாக தோனி திகழ்கிறார்.
இப் பத்திரிகை வெளியிட்டுள்ள பட்டியலில் ஸ்பெயின் டெனிஸ் வீரர் நடால், அமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் கோப் பிரயன்ட் ஆகியோரை முந்திய தோனி 10 ஆவது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் ஐமேக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட் உள்ளார். கால் பந்து வீரர்களான கிறிஸ்ரியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி முறையே மூன்று, நான்காவது இடங்களில் உள்ளனர். சீனாவின் பிரபல கூடைப்பந்து வீரர் யாவ் மிங் 11 ஆவது இடத்தை பெற்றுள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகளில் அசத்தி தொடர் நாயகன் விருது வென்ற இந்தியாவின் யவராஜ் சிங் 49 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
"முதல்10 பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண் நட்சத்திரம் என்ற பெருமையை "டெனிஸ் புயல்' கரோலின் வோஸ்னியாக்கி (9 ஆவது இடம்) பெறுகிறார். இது குறித்து "ஸ்போர்ட்ஸ் புரோ' பத்திரிகையின் ஆசிரியர் டேவிட் குஷன் கூறுகையில் "உலகக் கிண்ணத்தை வென்ற பின் தோனியின் புகழ் விளம்பர உலகில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இவருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் சச்சின் அளவுக்கு பேராதரவு இல்லை .ஆனாலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தங்களது பொருட்களை விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்களின் நம்பர்1 தேர்வாக தோனி திகழ்கிறார்' என்றார்.
News:Lankasri

மெஸ்சி இன்னும் சிறந்த நிலையை அடையவில்லை: பீலே

Best Blogger Tips
ஸ்பெயினின் பார்சிலோனா முன்கள வீரர் மெஸ்சி உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டு உள்ளார்.
அனைத்து காலகட்டத்திலும் சிறந்த வீரர் என்ற இலக்கையும் அவர் நெருங்கிக் கொண்டு இருக்கிறார். இருப்பினும் மெஸ்சி மிகச்சிறந்த நிலையை அடையவில்லை என பிரேசில் சாதனையாளர் பீலே கூறுகிறார்.
கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு காலகட்டங்களில் சாகசம் படைத்த வீரர்களுடன் ஒப்பிடுகையில் அர்ஜென்டினா வீரர் மெஸ்சி இன்னும் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது என பீலே கூறினார். உலகின் அனைத்து தருணத்திலும் அற்புதமான வீரர் என்ற பிரசாரம் மெஸ்சியை சூழ்ந்துள்ளது. இப்படி பிரசாரம் செய்யும் மற்றும் ஒப்பீடு செய்யும் நபர்கள் ஜோகன் கிரயப், மைக்கல் பிளாட்டினி, அல்பிரடோ டி ஸ்டெபனோ ஆகிய சரித்திர வீரர்களை மறந்துவிட்டார்கள். இந்த வீரர்கள் மெஸ்சியை விட மிகச்சிறந்த சாதனை நிகழ்த்தியவர்கள் என பீலே குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்தை லா டெர்செரா என்ற சிலி நாட்டு நாளிதழ் வெளியிட்டுள்ளது. பிரேசிலுடன் 3 முறை உலகக்கோப்பை சாம்பியன் வென்ற பீலே, சாம்பியன் லீக் இறுதிப்போட்டி குறித்தும் கூறினார். மே 28 ம் திகதி பார்சிலோனா அணி மான்செஸ்டர் யுனைடெட் அணியை வெம்ளியில் ஏன் வீழ்த்தக் கூடாது என கூறியுள்ளார்.
மான்செஸ்டர் யுனைடெட் வலிமையான அணி இங்கிலிஷ் ஸ்டைல் கால்பந்துக்கு ஒன்றி உள்ள அணி. அதே நேரத்தில் பார்சிலோனா உலகின் தலைசிறந்த அணி என பீலே தெரிவித்தார். பீலேவின் கருத்தை பொய்யாக்கும் வகையில் ஐரோப்பா புகழின் உச்ச நிலைக்கு பார்சிலோனா அணியை மெஸ்சி கொண்டு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
2009 ம் ஆண்டு சாம்பியன் லீக் கால்பந்து இறுதிப்போட்டியில் யுனைடெட் அணிக்கு எதிராக ஆடிய போது மெஸ்சி அடித்த கோலால் 2-0 வெற்றி கிடைத்தது.

இரண்டாம் இடத்தைப் பெற வேண்டும்: காம்பிர்

Best Blogger Tips
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற வேண்டும் என கொல்கத்தா அணியின் கப்டன் காம்பிர் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பினை உறுதிப்படுத்த வேண்டுமானால் புணே வாரியர்ஸ்க்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நிலை இருந்தது.
இதில் "ஆல்-ரவுண்ட்" ஆட்டத்தை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. தற்போது புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் கடின பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கப்டன் காம்பிர் கூறியது: மும்பைக்கு எதிரான கடைசி லீக் போட்டி மிகவும் முக்கியமான போட்டி. இதில் வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளை பெறுவதே எங்களுடைய குறிக்கோள்.
இப்போட்டியில் வெல்வதற்கு அதிகப்படியான உழைப்பை கொடுக்க வேண்டும். துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பில் வலுவாக செயல்படுவதன் மூலம் வெற்றியை வசப்படுத்த முடியும். கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி அசத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.
பந்து வீச்சாளர்களும் தங்களுடைய பணியை சிறப்பாகவே செய்தனர். முதலாவதாக துடுப்பெடுத்தாடிய யுவராஜ் அணி 135 முதல் 140 ரன்கள் வரை எட்டுவார்கள் என நினைத்தேன். ஆனால் எங்களுடைய சிறப்பான பந்துவீச்சால் 118 ரன்களுக்கு சுருண்டனர். இதனால் எளிய வெற்றி பெற முடிந்தது.

Friday, May 20, 2011

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி வீரர்களின் பஸ்லில் பெற்றோல் திருட்டு

Best Blogger Tips
இங்கிலாந்துக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பஸ்ஸிலிருந்து திருடர்களால் சுமார் 700 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பெற்றோல் திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிடில் செக்ஸ் பிராந்திய அணியுடனான 3 போட்டியின்  பின்னர் ஹோட்டலிருந்து வெளியேறியபோது இப்பெற்றோல் திருட்டு குறித்து இலங்கை அணியினர் அறிந்துகொண்டதாக அணியின் முகாமையாளர் அநுர தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியினர் மேற்கு ட்ரைடன் பகுதியில் கிரவுண் பிளாஸா ஹோட்டலில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இதனால் இலங்கை அணியின் எந்தவொரு திட்டமும் பாதிக்கப்படவில்லை எனவும் குறித்த பஸ் கம்பனியினால் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனுர தென்னகோன் கூறினார்.
News:Lankasri

ஐரோப்பிய லீக் கால்பந்து: போர்டோ சாம்பியன்

Best Blogger Tips
டப்ளின் நகரில் நடந்த ஐரோப்பிய லீக் கால்பந்து போட்டியில் போர்டோ அணி 1-0 கோல் கணக்கில் பிரகா அணியை வென்று சாம்பியன் ஆனது.
பிரகா அணியின் மாற்று ஆட்டக்காரர் மொசோரோ ஒரு கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டார். அந்த வாய்ப்பை தவிர போர்டோ அணி வேறு எந்த சவால்களையும் பெறவில்லை.
போர்டோ அணியின் 33 வயது மேலாளர் ஆண்ட்ரோ வில்லாஸ் போஸ் ஐரோப்பிய லீக் சாம்பியன் பரிசு கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் திளைத்தார். இருப்பினும் தனது அணி வீரர்கள் முழுத்திறனை ஆடுகளத்தில் காட்டவில்லை என்றும் சிறிது வருத்தப்பட்டார் போர்டோ அணியின் காப்டன் ஹெல்டன்.
தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடும் தருணத்தில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த பரிசுக்கோப்பை எனது பிறந்த நாளின் அற்புதமான பரிசு என அவர் தெரிவித்தார். பிரகா அணியினர் கடுமையாக ஆடினர் என்றும் அவர் கூறினார்.
போர்டோ அணிக்கு ஆட்டத்தின் முதல் பாதியில் பால்கோ தலையால் அடித்த கோலே வெற்றி தேடித் தந்தது.

சூதாட்ட புகார்: பலத்த கண்காணிப்பில் இலங்கை வீரர்கள்

Best Blogger Tips
இலங்கை கிரிக்கட் அணி 3 பயிற்சி ஆட்டம், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
முதல் பயிற்சி ஆட்டம் வருகிற 26ந் திகதி தொடங்குகிறது. இங்கிலாந்து லயன்சுடன் மோதும் 4 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடங்குகிறது.
இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது சூதாட்ட புகார் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்று அணியின் மேலாளர் டென்னிகூன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,"அணிக்கு வெளியே இருந்து இலங்கை வீரர்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. வீரர்கள் யாருடன் பேசுகிறார்கள் என்பதை மிகவும் கவனமாக பார்க்க வேண்டியுள்ளது. வீரர்களை நான் மிகவும் நெருக்கமாக கண்காணித்து வருகிறேன்" என்றார்.
இலங்கை அணியின் முன்னாள் கப்டன் சமீபத்தில் இலங்கை வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக புகார் கூறியிருந்தார். 1992ம் ஆண்டில் இருந்து புற்றுநோய் போல இலங்கை அணியில் சூதாட்டம் பரவி இருப்பதாக கூறி இருந்தார்.
இது தொடர்பாக இலங்கை விளையாட்டு அமைச்சகம் ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. இதன் காரணமாகவே இங்கிலாந்தில் விளையாடும் இலங்கை வீரர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
News:Lankasri
News

கட்டாய வெற்றியை நோக்கி களம் காண்கிறது மும்பை

Best Blogger Tips
ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நான்காவது ஐ.பி.எல். "டுவென்டி 20" கிரிக்கட் தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள லீக் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மும்பை அணி, இதுவரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 8 ல் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. பஞ்சாப் அணியின் எழுச்சி காரணமாக மீதமுள்ள இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் இன்று கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தும் என நம்பலாம்.
தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, கடைசியாக பங்கேற்ற டெக்கன் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இன்று சச்சின், பிலிஜார்டு, அம்பதி ராயுடு, ரோகித் சர்மா உள்ளிட்டோர் துடுப்பாட்டத்தில் அசத்தும் பட்சத்தில் வெற்றியை வசப்படுத்தலாம்.
வேகப்பந்துவீச்சில் போலார்டு, குல்கர்னி உள்ளிட்டோர் கைகொடுக்க வேண்டும். ஹர்பஜன் சுழலில் அசத்தி வருவது அணியின் பலமாக உள்ளது. இன்று கடைசி போட்டியில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணி, இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 5 ல் மட்டுமே வெற்றி கண்டு, அடுத்த சுற்று வாய்ப்பினை இழந்துள்ளது. இன்று மும்பைக்கு எதிராக திராவிட், பசல், வாட்சன் உள்ளிட்ட "டாப் ஆர்டர்" வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் ஆறுதல் வெற்றியுடன் ஐ.பி.எல். தொடரை நிறைவு செய்யலாம்.
ராஜஸ்தான் அணியில் திறமையான பந்துவீச்சாளர்கள் இருந்த போதிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. வேகப்பந்துவீச்சில் திரிவேதி, வாட்சன், டெய்ட் ஓரளவு நம்பிக்கை அளிக்கிறார். சுழலில் கப்டன் ஷேன் வார்ன் இருப்பது பலம். இவர் அதிக விக்கெட் வீழ்த்துவதில் கவனம் செலுத்தினால் நல்லது. இவருக்கு ஜோகன் போத்தா, அசோக் மேனரியா உள்ளிட்டோர் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் எதிரணியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடலாம்.
நான்காவது ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியிடம், மும்பை பரிதாபமான தோல்வி அடைந்தது. இதற்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். அரங்கில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் இதுவரை ஆறு போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சம பலத்தில் உள்ளன.

புணேயை வீழ்த்தியது கொல்கத்தா

Best Blogger Tips
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் புணேயை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
முதலில் ஆடிய புணே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 16.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
முன்னதாக பூவா தலையா வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி வழக்கத்துக்கு மாறாக 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. கம்பீரின் இந்த முயற்சிக்கு நல்ல பலனும் கிடைத்தது. புணே அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரைடர் 1 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மணீஷ் பாண்டே, பெர்குசன் ஆகியோர் தலா 16 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கங்குலி சற்று ஆக்ரோஷமாகவே ஆடினார். இக்பாலின் பந்துவீச்சில் ஸ்ட்ரெய்ட் திசையில் சிக்ஸர் ஒன்றையும் விளாசினார். ஆனாலும் அவர் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 18 ரன்களில் பதானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பிறகு வந்தவர்களில் யுவராஜ் 24 ரன்கள் எடுத்தார். கடைசிக் கட்டத்தில் ராணா 18 ரன்கள் எடுக்க அந்த அணி 118 ரன்கள் சேர்த்தது.
கொல்கத்தா தரப்பில் பதான், அல்ஹசன், பாலாஜி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கம்பீர் அரைசதம்: பின்னர் ஆடிய கொல்கத்தா அணியில் கோஸ்வாமி 6 ரன்களில் வெளியேறியபோதும், கேப்டன் கம்பீர் பொறுப்பை உணர்ந்து ஆடினார். திவாரி 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். பந்துவீச்சில் அசத்திய பதான் துடுப்பாட்டத்திலும் அதிரடியாக ஆடினார்.
வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவைப்பட்டபோது அவர் ஆட்டமிழந்தார். 25 பந்துகளைச் சந்தித்த பதான் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தார். 16.4 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. கேப்டன் கம்பீர் 46 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
பதான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
News:Lankasri

ஊடகவியலாளருடன் வாக்குவாதப்பட்ட கிறஸ் கெயில்

Best Blogger Tips
தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை தள்ளிவிட்டதாக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் மீது புகார் எழுந்துள்ளது.
மேலும் அவரின் கேமராவையும், மைக்ரோபோனையும் பறிக்க முயன்றதாக கெயில் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கெயில், பெங்களூரில் உள்ள ஷாப்பிங் சென்டருக்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து சென்று படம் பிடிக்க முயன்றுள்ளது ஒரு தனியார் தொலைக்காட்சி.
இதனால் கோபமடைந்த கெயில், தன்னை சுதந்திரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி திட்டியதோடு,அவர்களை தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. கெயிலுடன் பாதுகாப்புக்கு சென்ற காவலர்களும் தொலைக்காட்சி சேனலைச் சேர்ந்தவர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு இருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப் படுத்தியுள்ளனர். இதையடுத்து கெயில் தரப்பினர் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக பெங்களூர் பத்திரிகையாளர்கள், நகர பொலிஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷிடம் புகார் செய்துள்ளனர்.
ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சார்பில் விளையாடி வருகிறார் கெயில். ஏற்கெனவே கெயிலுக்கும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் டி.வி. செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு புதிய பிரச்னையில் சிக்கியுள்ளார் கெயில்.
News:Lankasri

பாகிஸ்தான் அணி தலைவர் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கம்

Best Blogger Tips
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஷாகித் அப்ரிதி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணிக்கு மிஸ்பா உல் ஹக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் அணியில் அப்ரிதி இடம்பெற்றுள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட், உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் ஆகிய இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்தனர்.
சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை முடித்துவிட்டு பாகிஸ்தான் திரும்பிய அப்ரிதி அணி விவகாரம் குறித்து வெளிப்படையாக விமர்சித்தார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனிடைய புதன்கிழமை இதுகுறித்து கருத்துத் தெரிவித்த இஜாஸ் பட், அணி விவகாரம் குறித்து அப்ரிதி தேவையில்லாமல் அடிக்கடி ஊடகங்களில் பேசி வருகிறார். அவரது நடவடிக்கை அதிருப்தியளிப்பதாக உள்ளது. அவரது கேப்டன் பதவிக்கு உத்தரவாதம் தரமுடியாது என்றார்.
இந்த நிலையில் அவர் வியாழக்கிழமை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பையில் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் களமிறங்கினாலும் பாகிஸ்தானை அரையிறுதி வரை கொண்டு சென்றவர். சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று கொடுத்தவர் அப்ரிதி என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்தியத் தீவுகள் தொடரை முடித்துவிட்டு பாகிஸ்தான் திரும்பிய அப்ரிதி, தனது கேப்டன் பணியில் பயிற்சியாளர் வக்கார் யூனுஸ் தேவையில்லாமல் தலையிடுகிறார் என குற்றம்சாட்டியிருந்தார்.
அப்ரிதியின் தந்தை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவருவதால், அப்ரிதி அங்கு சென்றுள்ளார். அதனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. சகோதரர் இறந்ததால் மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இருந்து பாதியிலேயே பாகிஸ்தான் திரும்பிய யூனிஸ்கான் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான்-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு ஒருநாள் ஆட்டங்கள் மே 28, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
News:Lankasri

சங்ககாரவுக்கு மிகப்பெரும் கௌரவம்

Best Blogger Tips
லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேச இலங்கை முன்னணி வீரர் சங்ககாரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4 ம் திகதி அவர் பேசுகிறார். கிரிக்கட் விளையாடி வரும் ஒரு வீரருக்கு இத்தகைய கௌரவம் லார்ட்சில் அளிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.
11 ஆண்டு கால லார்ட்ஸ் வரலாற்றில் மிக இளம் வயதில் கிரிக்கட் பற்றி பேச சங்ககாரவுக்கு (33 வயது) லார்ட்ஸ் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கால்பந்து சங்கத்தின் பயிற்சியாளராக மரடோனா தெரிவு

Best Blogger Tips
பிரபல கால்பந்து வீரர் மரடோனா யு.ஏ.இ கால்பந்து சங்கத்தின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த மரடோனா கடந்த சில மாதங்களாக எந்த அணிக்கும் பணியாற்றாமல் இருந்து வந்தார். இந்நிலையில் யு.ஏ.இ கால்பந்து சங்கம் அவரை தொடர்பு கொண்டு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி வலியுறுத்தியது.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக அச்சங்கத்தின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த மரடோனா நேற்று முன்தினம் யு.ஏ.இ கால்பந்து சங்கத்தின் பயிற்சிக்கான வசதிகளை நேரில் பார்வையிட்டார்.
இந்நிலையில் யு.ஏ.இ கால்பந்து சங்கத்தின் பயிற்சியாளராக மரடோனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும் இதுகுறித்து அவர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
மரடோனா தற்போது அர்ஜெண்டினா சென்றுள்ளதாகவும், அடுத்த மாதம் அவர் துபாய் வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News:Lankasri

Saturday, May 14, 2011

பரிதாப நிலையில் இருக்கும் கொச்சி அணி

Best Blogger Tips
ஐ.பி.எல் லீக் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி அரைசதம் கைகொடுக்க 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
நான்காவது ஐ.பி.எல் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நேற்று இந்தூரில் நடந்த லீக் போட்டியில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
டொஸ் வென்ற பஞ்சாப் கப்டன் கில்கிறிஸ்ட் களத்தடுப்பை தெரிவு செய்தார். கொச்சி அணிக்கு கப்டன் ஜெயவர்தனா, மெக்கலம் ஜோடி இணைந்து சூப்பர் துவக்கம் கொடுத்தது.
ஹாரிசின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பவுண்டரியுடன் அதிரடியை துவக்கினார் ஜெயவர்தனா. இவரது ஓவரில் தன் பங்கிற்கு 2 சிக்சர் அடித்து மிரட்டினார் மெக்கலம். முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த நிலையில், மெக்கலம்(32) அவுட்டானார்.
பின் வந்த ஜடேஜா(17), ஹாட்ஜ்(4) நிலைக்கவில்லை. ஓவைஷா(23) ரன் அவுட்டானார். பார்த்திவ் படேல் டக் அவுட்டாக, கோமெஜ் 2 ரன் மட்டும் எடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்த போதும் அதிரடியில் அசத்திய ஜெயவர்தனா(76 ரன்கள், 52 பந்து) கடைசியில் ரன் அவுட்டானார். கொச்சி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு, 178 ரன்கள் எடுத்தது.
கடின இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு வல்தாட்டி(17) மீண்டும் ஏமாற்றம் தந்தார். கில்கிறிஸ்ட்(9) சொதப்பினார். இதன் பின் இணைந்த மார்ஷ், தினேஷ் கார்த்திக் ஜோடி, மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இதில் தினேஷ் கார்த்திக் சிக்சர் மழை பொழிந்தார். வினய் குமார், கோமெஜ் மற்றும் பரமேஷ்வரன் என யாரையும் இவர் விட்டுவைக்கவில்லை. ஹாட்ஜ், ஜடேஜா ஓவர்களில் தலா 2 சிக்சர்கள் விளாசினார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு 111 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் 69 ரன்னில்(7 பவுண்டரி, 5 சிக்சர்) அவுட்டானார். இதே ஓவரின் கடைசி பந்தில் மார்ஷ்(42) வீழ்ந்தார்.
பின் வந்த ஹசி(21), மந்தீப் சிங்(15) இணைந்து ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவுஸ்திரேலிய வீரர் ஜான்சனின் ரகசிய திருமணம்

Best Blogger Tips
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தனது தோழியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த ரகசிய திருமணத்திற்கு தனது தாயாரைக்கூட அவர் அழைக்கவில்லை என்று "தி டெய்லி கிராப்" செய்தி வெளியிட்டுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சிக்கு 50 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்கள் யாரும் அழைக்கப்படவில்லை.
29 வயதான ஜான்சன் வாரியர்ஸ் அணியில் விளையாடுவதற்காக மேற்கு அவுஸ்திரேலியாவுக்கு 2008ம் ஆண்டு வந்துள்ளார். அப்போது கராத்தே சாம்பியன் ஜெஸிகாவுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெஸிகாவை திருமணம் செய்து கொண்டதை அவர் பேஸ்புக்கில் செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ளார். திருமணத்திற்கு ஜான்சன் தனது தாயாரை அழைக்காததன் மூலம் அவரை அவமதித்துவிட்டார் என அவரது உறவினர்கள் சிலர் குறை கூறியுள்ளனர்.

ஐ.பி.எல். போட்டிகளுக்கு சவால் விடும் வகையில் ஸ்ரீ லங்கா பிரீமியர் கிரிக்கட் போட்டிகள் ஜுலையில் ஆரம்பம்

Best Blogger Tips
இந்தியாவின் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளுக்குச் சவால் விடும் வகையில் இலங்கை பிரீமியர் (எஸ்எல்பிஎல்) போட்டிகள் எதிர்வரும் ஜுலையில் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளின் போது ஒவ்வொரு மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தலா ஒவ்வொரு பிரீமியர் லீக் கிரிக்கட் அணி இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் கீழ் உருவாக்கப்படவுள்ளது. 
தொடர்ச்சியாக பதினெட்டு நாட்கள் வரை 24 போட்டிகளைக் கொண்டதாக நடைபெறும்  இலங்கை பிரீமியர் லீக் கிரிக்கட் போட்டிகளும் உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளன. அதற்கான ஒளிபரப்பு உரிமையை முதல் இரண்டு வருடங்கள் வரை கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் சேனல் பெற்றுக் கொண்டுள்ளது.
பிரஸ்தாப சேனல் ஜனாதிபதியின் இரண்டாம் மகனும் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ஷவின் காதலிக்கு உரித்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது வடக்கு கிரிக்கட் அணிக்கு ஒரிக்ஸ் அணி என்றும் கிழக்கு கிரிக்கட் அணிக்கு நாகா (நாகம்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் : புதிய சாதனை படைத்த லசித் மாலிங்க

Best Blogger Tips
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனைக்குரியவராகியுள்ளார் இலங்கையரான லஷித் மாலிங்க.
இவர் இதுவரை 37 போட்டிகளில் பங்குபற்றி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவ்வருட தொடரில் 11 போட்டிகளில் பங்குபற்றி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியமையும் மாலிங்கவின் மற்றொரு சாதனையாகும்.
2008 இல் பாகிஸ்தானை சேர்ந்த சொஹைல் தன்விர் -ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி 22 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அவ்வருடம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
2009இல் டெக்கன் சார்ஜஸ் சார்பில் விளையாடிய ஆர்.பி.சிங் 23 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அவரது அணி சுற்றுப்போட்டியை வென்றது.
கடந்த வருடம் வித்தியாசமான ஒரு நிலைமை தோன்றியது. பிரக்யன் ஓஜா அதிகூடிய விக்கெட்டுக்களை எடுத்தபோதும் அவரது அணியால் சமபியனாக முடியவில்லை. சென்னை சுப்பர் கிங்ஸ் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் சம்பியனாகியது.
இப்போது நடைபெறும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் மாலிங்க மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தலைவர் அடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
'அவருக்கு அனுபவம் வந்துவிட்டது. அவர் மிகவும் பயங்கரமான இருபதுக்கு 20 பந்து வீச்சாளர். அவரது யோக்கர் மிக ஆபத்தானது. பவுன்ஸர்கள் தடுமாற வைப்பவை. அவரது பந்துவீச்சில் பல்வேறு வகைகளை காணலாம்' என கில்கிறிஸ்ட் கூறினார்.

ஸ்பெயினில் பார்சிலோனா அணி ஆதிக்கம்

Best Blogger Tips
பார்சிலோனா கால்பந்து அணி 3 வது முறை தொடர்ந்து லா லிசா சாம்பியன் பட்டத்தை புதன்கிழமை கைப்பற்றியது.
அந்த அணி லெவன் டே நகரில் 1-1 கோல் கணக்கில் ஆட்டத்தை சமன் செய்ததை தொடர்ந்து ஸ்பெயின் போட்டியில் தனது ஆதிக்க்த்தை மீண்டும் நிலைநிறுத்தியது.
இந்த ஆண்டு பலவித மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் பார்சிலோனா அசத்தலாக ஆடி பரிசுக் கோப்பையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மாட்ரிட் கால்பந்து அணி கடந்த கோடை காலத்தில் ஜோஸ் மவுரினோவை கொண்டு வந்து பழைய நீண்ட கால எதிரியான பார்சிலோனாவை ஒடுக்க முயன்றது. மவுரினோ தான் ஆடிய ஆட்டங்களில் வெற்றியாளராகவே வலம் வந்தார்.
இவர் போர்டோ அணியுடன் சாம்பியன் லீக் வெற்றி வாகை சூடினார். செலிசா அணியுடன் அவருக்கு நல்ல வெற்றி கிடைத்தது. மாட்ரிட் அணி கோபா டெல்ரே போட்டியில் 1-0 கோல் கணக்கில் பார்சிலோனா அணியை வென்று இருந்தது.
மவுரினோ மாட்ரிட் அணியில் இடம் பெற்றதன் மூலம் பார்சிலோனாவுக்கு அதிரடி சவால் தரலாம் என எதி;ர்பார்க்கப்பட்டது. ஆனால் மாட்ரிட் உரிய சாதனை படைக்க முடியவில்லை. பார்சிலோனாவை வீழ்த்த எவ்வளவு பணம் செலவழித்த போதும் மாற்றஙகள் செய்த போதும் மாட்ரிட் அணியால் தனது பலமிக்க எதிரிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
News:Lankasri

வீரர்களின் அந்தரங்கங்களை வெளியிட்டமையால் பறி போனது வேலை வாய்ப்பு

Best Blogger Tips
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ரசிகர்களையும், வீரர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக ஒவ்வொரு அணிகளும் சியர்ஸ் லீடர்ஸ் என்ற அழகிகளின் நடனத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் தென் ஆபிரிக்காவில் இருந்து 40 நடன அழகிகள் பணிக்கு அமர்த்தப் பட்டனர். இவர்களில் ஒருவரான கேப்ரியலா (வயது 22) திடீரென சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப் பப்பட்டார். அவர் வீரர்களின் அந்தரங்க விஷயங்களை கசியவிட்டதால் நீக்கப்பட்டது இப்போது தெரிய வந்துள்ளது.
போட்டிக்கு பிறகு நடக்கும் விருந்துகளில் வீரர்கள் அடிக்கும் கும்மாளங்களையும், தன்னை போன்ற நடன அழகிகளுடன் வீரர்கள் நெருங்கி தொடர்பு வைத்துக் கொள்ள விரும் புகின்றனர் போன்ற விஷயங்களையும் அவர் இணையதளம் மூலம் தனது நட்பு வட்டாரத்தில் பரவவிட்டது ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு தெரியவரவே அவர் கழற்றி விடப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர் ஒருவர், நடன அழகிகளுக்கு பறக்கும் முத்தமிட்டதுடன், உங்களை கட்டித்தழுவ ஆசையாக இருக்கிறது. எனது அறைக்கு வாருங்கள் என்று அழைத்ததாக கேப்ரியலா ஒரு தகவலில் கூறியுள்ளார். அதே சமயம் சில இந்திய வீரர்களை அவர் பாராட்டியுள்ளார். டோனி, ரோகித் ஷர்மா ஆகியோர் அமைதியாகவும் இது போன்ற விஷயங்களில் விலகி இருப்பார்கள் என்றும் டெண்டுல்கர் இவற்றில் கலந்து கொள்வதில்லை என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
வேலை போனது குறித்து கேப்ரியலா கூறும் போது நான் எந்த கிரிமினல் குற்றமும் செய்யவில்லை. எந்த குறிப்பிட்ட வீரரின் பெயரையும் குறிப்பிட்டு நான் எழுதவில்லை. பொதுவாகவே எழுதினேன். இருந்தாலும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் எனது வருமானம் பறிபோயிருக்கிறது என்றார்.
News:Lankasri

Thursday, May 12, 2011

ஹசான் திலகரட்னவுக்கு பாதுகாப்பளிக்க அரசாங்கம் தயார்

Best Blogger Tips
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான ஹசான் திலகரட்னவுக்கு பாதுகாப்பு வழங்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரக்கெட் துறையில் 1992 ஆம் ஆண்டு முதல் ஆட்ட நிர்ணய சதி இடம்பெறுவதாக ஹசான் திலகரட்ன தெரிவித்திருந்தார். இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடத் தயார் எனவும் அவர் கூறினார். ஆனால் தனக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரினார்.
இந்நிலையில் ஹசானுக்கு போதிய பாதுகாப்பு வழங்கத் தயார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்குமாறு ஹசான் திலகரட்னவை அமைச்சர் அளுத்கமகே அறிவுறுத்தியுள்ளார்.
ஹசான் திலகரட்ன உறுதியளித்தபடி ஆட்டநிர்ணய சதி குறித்து தகவல்களை வழங்கினால் அவருக்கு பாதுகாப்பளிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அதேவேளை கிரிக்கெட் விளையாட்டின் நன்மை கருதி ஆட்டநிர்ணய சதியில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதன் மூலம் இவ்விளையாட்டின் புகழை காப்பது ஹசான் திலகரட்வின் கடமை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலக டென்னிஸ் தர வரிசை: நடால் தொடர்ந்து முதலிடம்

Best Blogger Tips
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். செர்பியா வீரர் நோவாக் ஜோகோவிச் 2வது இடமும், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 3வது இடமும் வகிக்கின்றனர்.அமெரிக்க வீரர்கள் மார்ட் பிஷ் 11வது இடமும், ஆன்டிரோட்டிக் 12 வது இடமும் பிடித்துள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி (டென்மார்க்) தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். பெல்ஜியம் வீராங்கனை கிம்கிலிஸ்ஸடர் 2வது இடமும் ரஷ்ய வீராங்கனை சோனரோவா 3வது இடமும் பெற்றுள்ளனர். 

அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 10வது இடத்தில் இருந்து 17வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 38 ஆண்டு கால உலக டென்னிஸ் தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் அமெரிக்க வீரர் வீராங்கனைகள் இடம் பிடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது

பிரிமியர் கால்பந்து: ஆர்சனல் பதவி பெர்குசன் நிராகரித்தார்

Best Blogger Tips
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் மேலாளராக சர் அலெக்ஸ் பெர்குசன் உள்ளார்.
இவர் மான்செஸ்டர் அணியில் சேருவதற்கு முன்னர் ஆர்சனல் கிளப்பில் மேலாளராக சேர அழைப்பு வந்தது. கடந்த 1986 ம் ஆண்டு இந்த அழைப்பு அவருக்கு வந்தது. ஆனால் பெர்குசன் ஏற்கவில்லை.
இதுகுறித்து செவ்வாய்கிழமை பெர்குசன் கூறுகையில், ஆர்சனல் அணியில் வாய்ப்பு கிடைத்ததும் என்னுடன் வால்டர் ஸ்மித்தை அழைத்துச் செல்ல விரும்பினேன். ஆர்சனல் வாய்ப்பு குறித்து வால்டரிடம் கூறியபோது அந்த அணி மிகப் பெரிய கிளப் என வால்டர் கூறினார்.
அந்த நிலையில் ஆர்சனலுடன் இணைய வால்டரை அழைத்தேன். ஆனால் அவர் ரேஞ்சர்ஸ் கிளப்புக்கு செல்வதாக கூறி அதிர வைத்தார். இந்த நிலையில் ஆர்சனல் அழைப்பை ஏற்க முடியவில்லை.
ஏனெனில் அப்போது ஸ்காட்லாந்து அணியுடன் மெக்சிகோ உலகக் கோப்பைக்கு சென்று கொண்டிருந்தேன் என பெர்குசன் கூறினார். வால்டர் ஸ்மித் ரேஞ்சர்ஸ் அணிக்கும், நான் பின்னர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கும் சென்றோம் என்றும் பெர்குசன் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை ஸ்காட்டிஷ் பிரிமியர் லீக்கில் ரேஞ்சர்ஸ் அணியும், டன்டி யுனைடெட் அணியும் மோதின. வால்டர் ஸ்மித் பொறுப்பு வகிக்கும் கடைசி ஆட்டம் இதுவாகும். இந்த நிலையில் பெர்குசன் மேற்கண்ட கருத்துகளைத் தெரிவித்தார்.

முப்பைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அபார வெற்றி

Best Blogger Tips
ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. இந்தத் தொடரில் மும்பை பெறும் 3-வது தோல்வியாகும் இது.
சண்டீகரிலுள்ள மொஹாலி ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 12.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.
பூவா தலையா வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சச்சின், பஞ்சாப் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தார்.
துவக்க ஆட்டக்காரர்களாக வந்த வல்தாட்டி 14 ரன்களும், கில்கிறைஸ்ட் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கில்கிறைஸ்ட் ஒரு சிக்ஸர், 2 பெüண்டரிகள் விளாசினார்.
ஆனால் 3-வதாக ஜோடி சேர்ந்த மார்ஷும், தினேஷ் கார்த்திக்கும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். கார்த்திக் 24 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மார்ஷ் 34 பந்துகளில் 43 ரன்கள் குவித்து அவுட்டானார். கார்த்திக் ஒரு சிக்ஸரும், 4 பெüண்டரிகளும் விளாசினார்.
பின்னர் வந்தவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். முனாப் படேல் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
மலிங்கா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் கடினமான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. ஆரம்பத்திலேயே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சச்சின் 6 ரன்களிலும், ரோஹித் சர்மா 5 ரன்களிலும் வீழ்ந்தனர். துவக்க ஆட்டக்காரர் பிளிஸ்ஸôர்ட் 15 ரன்களும், கைரன் போலார்ட் 17 ரன்களும் சேர்த்தனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராயுடு 13 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
பஞ்சாப் வீரர் பட் பந்துவீச்சில் கடைசி 4 விக்கெட்டுகளும் சரிந்தன. இதனால் அந்த அணி 87 ரன்களிலேயே சுருண்டது. 22 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பார்கவ் பட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
பிரவீண்குமார் 2 விக்கெட்டுகளும்,பிபுல் சர்மா, ஹாரிஸ், ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபில் 4-வது சீசனில் மும்பை பெறும் 3-வது தோல்வியாகும் இது.

கங்குலி வருகையால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள்

Best Blogger Tips
டெக்கான் அணிக்கெதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புணே அணிக்காக கங்குலி சிறப்பாக விளையாடினார். கங்குலி வருகையால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
4-வது ஐபிஎல் சீசனில் எந்த அணியாலும் கங்குலி ஏலத்தில் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் புணே அணிக்காக கங்குலி தேர்வானார். ஆனால் தேர்வு செய்யப்பட்ட பின்னர் கடந்த 2 ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
இந்த நிலையில் டெக்கான் அணிக்கெதிராக செவ்வாய்க்கிழமை அவர் களமிறங்கினார். அவர் மைதானத்துக்குள் நுழையும்போதே ஹைதராபாத் ரசிகர்கள் உற்சாகக் குரலிட்டு அவரை வரவேற்றனர். கங்குலி பெüண்டரி, சிக்ஸர் விளாசியபோது ரசிகர்கள் எழுப்பிய கோஷம் விண்ணைத் தொட்டது.
இந்த நிலையில் அவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மைதானத்துக்குள் ஒரு ரசிகர் நுழைந்து கங்குலியின் காலில் விழுந்து வணங்கினார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அந்த ரசிகரை மைதானத்திலிருந்து வெளியேற்றினர்.

Text Widget

Text Widget