Pages

Saturday, May 14, 2011

ஐ.பி.எல் : புதிய சாதனை படைத்த லசித் மாலிங்க

Best Blogger Tips
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனைக்குரியவராகியுள்ளார் இலங்கையரான லஷித் மாலிங்க.
இவர் இதுவரை 37 போட்டிகளில் பங்குபற்றி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவ்வருட தொடரில் 11 போட்டிகளில் பங்குபற்றி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியமையும் மாலிங்கவின் மற்றொரு சாதனையாகும்.
2008 இல் பாகிஸ்தானை சேர்ந்த சொஹைல் தன்விர் -ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடி 22 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அவ்வருடம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.
2009இல் டெக்கன் சார்ஜஸ் சார்பில் விளையாடிய ஆர்.பி.சிங் 23 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அவரது அணி சுற்றுப்போட்டியை வென்றது.
கடந்த வருடம் வித்தியாசமான ஒரு நிலைமை தோன்றியது. பிரக்யன் ஓஜா அதிகூடிய விக்கெட்டுக்களை எடுத்தபோதும் அவரது அணியால் சமபியனாக முடியவில்லை. சென்னை சுப்பர் கிங்ஸ் சிறந்த துடுப்பாட்டத்தின் மூலம் சம்பியனாகியது.
இப்போது நடைபெறும் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியில் மாலிங்க மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தலைவர் அடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
'அவருக்கு அனுபவம் வந்துவிட்டது. அவர் மிகவும் பயங்கரமான இருபதுக்கு 20 பந்து வீச்சாளர். அவரது யோக்கர் மிக ஆபத்தானது. பவுன்ஸர்கள் தடுமாற வைப்பவை. அவரது பந்துவீச்சில் பல்வேறு வகைகளை காணலாம்' என கில்கிறிஸ்ட் கூறினார்.

0 comments:

Post a Comment

Text Widget

Text Widget