பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் கப்டன் அப்ரிடி. அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் நேற்று கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்ரிடியின் இந்த முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் மீதும், தேர்வு குழு உறுப்பினர் முகமது இல்லியாஸ் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார். இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கட் வாரியம் அப்ரிடி மீது நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது ஒப்பந்ததை சஸ்பெண்டு செய்துள்ளது. அதோடு அவருக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழையும் நீக்கி உள்ளது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி போட்டியிலும் மற்ற எந்த 20 ஓவர் போட்டிகளிலும் விளையாட இயலாது. அதோடு விமர்சனம் செய்தது தொடர்பாக அப்ரிடியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. |
0 comments:
Post a Comment